தமிழக செய்திகள்

திண்டுக்கல் நந்தனம் சாலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

நந்தனம் சாலை பகுதியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் குஞ்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்ற நபர், நந்தனம் சாலை பகுதியில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது திடீரென அதில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதனால் சுதாரித்துக் கொண்டு பாலசுப்பிரமணி சற்று விலகிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஒரு சில வினாடிகளில் அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிறிது நேரத்தில் வாகனம் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவத்தில் பாலசுப்பிரமணி அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர்தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை