தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.

தினத்தந்தி

இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் வடக்கு வலசை காடு பகுதியில் வசித்து வந்தவர் பூபாலன் (வயது 46). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது அருகில் சென்ற மின்வயர் அவர் மீது உரசியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூபாலன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பூபாலன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சாலைக்கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை