தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

கோபி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி ஆனார்.

தினத்தந்தி

கடத்தூர்

கோபி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி ஆனார்.

மின்வாரிய ஊழியர்

நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதி கோரக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 59).

இவர் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் உள்ள துணை மின் நிலையத்தில் ஊழியராக (போர்மென்) பணியாற்றி வந்தார். நேற்று துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) பராமரிப்பு பணி நடைபெற்றது.

சாவு

இந்த பணியில் சண்முகம் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. அதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிழந்தார். இது பற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்