தமிழக செய்திகள்

ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை கருத்தரங்கு

ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை கருத்தரங்கு

ஊட்டி

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-Nam) குறித்த கருத்தரங்கு நடந்தது. தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி தொடங்கி வைத்தார். நீலகிரி விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி, மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்து வேளாண் வணிகத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும், e-Nam செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு மாதிரி விற்பனை நிறுவனங்களான புளூ மவுண்டன் மற்றும் முதுமலை உழவர் உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்த விவசாயிகளின் பெயரில் விற்பனை செய்து காண்பிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் வேளாண் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மின்னணு தேசிய வேளாண் சந்தை குறித்தும், விற்பனை குறித்தும் விளக்கம் அளித்தார். இதில், தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்