தமிழக செய்திகள்

எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது- அரசு தரப்பு வழக்கறிஞர்

எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தமிழக முதல்வர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. #MadrasHC #DMK

சென்னை

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் அணியினருக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை கோரி திமுக கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் சென்னை ஐகோர்ட்டில் இந்த விளக்கத்தை அளித்தார்.

எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்ட தினகரன் அணியிருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தை முன் வைத்தார்.

இந்த நிலையில், வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பில் கால அவகாசம் கோரியதால், விசாரணை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு வாரத்தில் மனுதாரர் தரப்பிலும் பதில் அளிக்க சென்னை ஐக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு