மதுரை,
மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அங்கு 273 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரியிலும், ரெயில்வே ஆஸ்பத்திரியிலும் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்தநிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம், ஒப்பந்த சுகாதார பெண் பணியாளர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த டீன் சங்குமணி உத்தரவிட்டார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் ஊழியர் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த பெண் ஊழியர் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார். இதுபோல், வேறு யாரும் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டீன் கூறினார்.