தமிழக செய்திகள்

காலை சிற்றுண்டி திட்டத்தை பள்ளி சத்துணவு திட்டத்தில் சேர்க்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலை சிற்றுண்டி திட்டத்தை பள்ளி சத்துணவு திட்டத்தில் சேர்க்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தினத்தந்தி

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து சத்துணவு ஊழியர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சமூக நலத்துறை ஆணையரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அ.மலர்விழி, பொருளாளர் எம்.ஆர்.திலகவதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை பள்ளி சத்துணவுத் திட்டத்திலும் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்