தமிழக செய்திகள்

என்ஜின் பழுது; காரைக்குடியில் இருந்து பல்லவன் ரெயில் 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக சென்னைக்கு புறப்பட்டது

சென்னை செல்லும் பல்லவன் ரெயில் என்ஜின் பழுதினால் காரைக்குடியில் இருந்து 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக புறப்பட்டு சென்றது.

திருச்சி,

காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பல்லவன் ரெயில் தினசரி இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சென்னை செல்லும் பல்லவன் ரெயில் என்ஜின் பழுதினால் காரைக்குடியில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை.

இதனால் திருச்சியில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு பல்லவன் ரெயில் இயக்கப்படும் என தெரிவித்தது.

இந்நிலையில், மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு சென்னை செல்லும் பல்லவன் ரெயில் காரைக்குடியில் இருந்து 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக புறப்பட்டு சென்றது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...