தமிழக செய்திகள்

என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

திசையன்விளையில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி

திசையன்விளை:

திசையன்விளை தங்கம் திருமண மண்டப தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருடைய மகன் பாலாஜி (வயது 28). பி.இ. பட்டதாரி. திருமணம் ஆகாதவர். தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த என்ஜினீயர் பாலாஜி பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் தலைவலி குணம் ஆகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு