தமிழக செய்திகள்

கல்பாக்கம் அருகே கார் மோதி என்ஜினீயர் பலி

கல்பாக்கம் அருகே கார் மோதி என்ஜினீயர் பலியானார்.

தினத்தந்தி

என்ஜினீயர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி உதையாதி தட்டு கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 25), என்ஜினீயர்.

சென்னையில் உள்ள தனியார் லிப்ட் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயனராக பணியாற்றி வந்தார். இவர் பணி நிமித்தமாக புதுப்பட்டினம் அருகே உள்ள ஒரு கடையில் லிப்ட் பழுது நீக்கிவிட்டு சென்னையில் உள்ள லிப்ட் அலுவலகத்திற்கு செல்ல கிழக்கு கடற்கரை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பலி

வெங்கப்பாக்கம் அடுத்த ஆரம்பாக்கம் அருகே சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்லும் கார் எதிர்பாராத விதமாக அஜித் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்