தமிழக செய்திகள்

பொறியியல் மாணவர்கள் சேர்க்கைகான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் திங்கள்கிழமை (நாளை) வெளியிடப்படவுள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான 2023-2024-ஆம் கல்வியாண்டு மாணவா சேர்க்கை விண்ணப்பப் பதிவு மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது.

பொறியியல் கல்லூரிகளில் சேர மொத்தம், 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. 1 லட்சத்து 55 ஆயிரத்து 124 பே விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனர். இவாகளுக்கான சான்றிதழ் சரிபாப்புப் பணிகள் கடந்த 20-ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை (திங்கள்கிழமை) வெளியாகிறது. மாணவாகள், தரவரிசை பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தரவரிசை பட்டியல் வெளியான பிறகு, தரவரிசை தொடாபாக புகாகளைத் தெரிவிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை மாணவாகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.