தமிழக செய்திகள்

எண்ணூர் வாயு கசிவு விவகாரம்: உரத் தொழிற்சாலையில் வல்லுநர் குழு ஆய்வு

வல்லுநர் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பான முதற்கட்ட அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முழு அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட ஆலையில் வல்லுநர் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே ஆலையை மீண்டும் திறக்க அரசிடம் அனுமதி பெறப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள ஆலை நிர்வாகத்தினர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி ஆய்வு நடைமுறையை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்