தமிழக செய்திகள்

நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த ஈபிஎஸ்.. முந்திக்கொண்டு குளிர்பானங்களை எடுத்து சென்ற மக்கள்

பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் சேலம் சூரமங்கலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மோர், கம்மங்கூழ், தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை உள்ளிட்டவற்றை வழங்கிய நிலையில், அவற்றை பெற பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனிடையே பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பொறுமை காக்காத சிலர், நீர்மோர் பந்தலின் பின்புறம் கைகளை உள்ளே விட்டு குளிர்பானங்களை அள்ளிச் சென்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்