தமிழக செய்திகள்

ஈரோடு: வேன் மீது பைக் மோதல்; 2 பேர் பலி

ஈரோட்டில் வேன் மீது பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு சத்தியமங்கலம் அருகே அக்கறைதந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த வேன் மீது பைக் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் பைக்கை ஓட்டி வந்த 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.

அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த நபர்கள் இருவரும் சூளகிரி பகுதியை சேர்ந்த இளைஞர்களான வருண், அஜீத் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து