தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு - ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், தன்னிடம் ரூ.14 கோடி பணம் வாங்கிவிட்டு அதில் ரூ.3 கோடியை மட்டும் திருப்பி செலுத்தியதாகவும், மீதி பணத்தை தராமல் மிரட்டுவதாகவும் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்து பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் ஷர்மிளா மீது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஷர்மிளா மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து