தமிழக செய்திகள்

3 பள்ளி மாணவர்கள் சாணி பவுடர் குடித்ததால் பரபரப்பு

காரிமங்கலம் அருகே 3 பள்ளி மாணவர்கள் சாணி பவுடர் குடித்ததால் பரபரப்பு

தினத்தந்தி

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சென்னம்பட்டி கிராமத்தை 3 மாணவர்கள் அனுமந்தபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வருகிறார்கள். 14 வயது கொண்ட இந்த 3 மாணவர்களும் நேற்று தங்கள் வீட்டின் அருகே சாணி பவுடரை கலக்கி குடித்து உள்ளனர். அதன்பின்னர் பள்ளிக்கு சென்ற இவர்கள் மற்ற மாணவர்களிடம் இது பற்றி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 3 மாணவர்களையும் மீட்டு அனுமந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளித்தனர். சாணி பவுடர்குடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்