தென்காசி:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. இந்த ரயிலுக்கு தென்காசியில் நிறுத்தம் இல்லை. இந்த ரெயில் தென்காசியில் நின்று செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஒரு எச்சரிக்கை பலகை ரயில் நிலையத்தின் எதிரே வைக்கப்பட்டுள்ளது.
இதனை தென்காசி ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வெங்கடேஸ்வரன் வைத்துள்ளார். இந்த எச்சரிக்கை பலகையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.