தமிழக செய்திகள்

கடைக்குள் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு: தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்

திருவள்ளூரில் கடைக்குள் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

தினத்தந்தி

திருவள்ளூரில் உள்ள கோலக்கொண்ட அம்மன் கோவில் அருகே உள்ள கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவர் அதே பகுதியில் சோடா கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் கடையில் இருந்த போது, திடீரென கடைக்குள் சுமார் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று உள்ளே புகுந்தது. இதைக் கண்ட அவர் அலறி அடித்தபடி கடையிலிருந்து வெளியே ஓடினார். இது குறித்து அவர் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடைக்குள் புகுந்த சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து பூண்டி காப்புக் காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்