தமிழக செய்திகள்

ஏரி மற்றும் குளங்களை தூர்வார வேண்டி தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

ஏரி மற்றும் குளங்களை தூர்வார வேண்டி தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் குப்பை கூளங்களாக உள்ளது. அரசு உடனடியாக கவனம் செலுத்தி குப்பைகளை அகற்றும் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

மழைக்காலம் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு உடனடியாக நீர்நிலைகளை தூர்வார அதிக கவனம் செலுத்தி மழை நீரை சேமிக்க அக்கறை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT