தமிழக செய்திகள்

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவை நீட்டிப்பு

வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவை மேலும் ஒருமாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

தினத்தந்தி

சென்னை,

சென்னை - நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவை மேலும் ஒருமாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் முதல் வரும் 25ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 05.15 மணிக்கு ரெயில் (06067) புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு ரெயில் (வண்டி எண் 06068) புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னைஎழும்பூர் வந்தடையும் - என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது