தமிழக செய்திகள்

போலி டாக்டர் கைது

சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சோளிங்கரை அடுத்த பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சோளிங்கர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் மற்றும் வருவாய்த் துறையினர் சென்று முருகன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் அவர் ஆங்கில மருத்துவம் பார்த்ததற்கான ஆதாரங்கள் சிக்கியது. அவரிடம் இருந்து மருந்து பொருட்கள் பறிமுதல் டெப்பட்டது. மேலும் மருத்துவ அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை