தமிழக செய்திகள்

தவறி விழுந்த பெண் பலி

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சாணார்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் ராசு. அவருடைய மனைவி சின்னம்மாள் (வயது 54). இவர், திண்டுக்கல் சிறுமலை பிரிவில் செயல்படுகிற தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இவர், கோட்டையூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ்சில் கணவாய்பட்டி பஸ் நிறுத்தத்தில் ஏறினார்.

சிறுமலை பிரிவு அருகே பஸ் வந்தபோது அவர் இறங்குவதற்கு படிக்கட்டில் தயாராக நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர், ஓடும் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சின்னம்மாளை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சின்னம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு