தமிழக செய்திகள்

மரக்கிளையை வெட்டும்போது மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

தானிப்பாடி அருகே மரக்கிளையை வெட்டும்போது மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே இளையாங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்தவர் டல்லாஸ் (வயது 55), விவசாயி.

இவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரத்தை இன்று மாலை டல்லாஸ் வெட்டி கொண்டிருந்தார். அப்போது மரக்கிளை அருகில் இருந்த மின்சார கம்பியில் டல்லாஸ் கைப்பட்டது.

இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து உடனடியாக மின்சாரத்தை நிறுத்திவிட்டு பெருங்குளத்தூர் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்

அதன்பேரில் உதவி பொறியாளர் மற்றும் மின்சார துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு