தமிழக செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி 4 பேர் மீது வழக்குப்பதிவு

விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டா. இது தொடாபாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா.

தினத்தந்தி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் மாதேஷ் (வயது 20). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் மகன் சபரி (35). இவர்களுக்கிடையே நிலப்பிரச்சினை உள்ளது.

சம்பவத்தன்று மாதேஷ் தனக்கு சொந்தமான நிலத்தில் நெல்நாற்று பிடுங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சபரி தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து, மாதேசை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மனமுடைந்து காணப்பட்ட மாதேஷ், விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் சபரி, சரவணன், நாகம்மாள், அறிவழகன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு