தமிழக செய்திகள்

விவசாயிகள் மாநாடு

வத்தலக்குண்டுவில் விவசாயிகள் மாநாடு நடந்தது.

தினத்தந்தி

அகில இந்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் முதல் மாநாடு வத்தலக்குண்டுவில் நடந்தது. மாநாட்டுக்கு விவசாயி சந்திரபோஸ் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர்கள் திவாகர், ரங்கசாமி, அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் நாகம்மாள் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளில் இருந்து கிளை கால்வாய்கள் அமைத்து வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சோலார் மின்சாரம் தயாரிக்க விவசாய நிலங்களை வாங்க அனுமதி தரக்கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்