தமிழக செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கடமலைக்குண்டுவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடமலைக்குண்டுவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். அரசு நலத்திட்டங்கள், கோரிக்கை தொடர்பான மனுக்களும் வழங்கலாம். மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT