தமிழக செய்திகள்

கோவில்பட்டியில்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில்விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினா. கயத்தாறு தாலுகாவில் உள்ள கிராம பகுதிகளில் அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் காற்றாலைகளை அமைத்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தினர் கிராமத்தில் உள்ள ஓடை கரைகளை உடைத்து, நீர் நிலைகள், வண்டிப் பாதைகளை சேதப்படுத்தி விவசாயத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இப்பிரச்சினையில் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை