தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

கும்மிடிப்பூண்டி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அவரது தந்தையான சஞ்சய் ராய் (வயது 39) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சஞ்சய் ராயை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT