தமிழக செய்திகள்

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் துரைசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் உலகநாதன், மாவட்ட செயலாளர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது காரை ஏற்றி படுகொலை செய்த சதிக்கு காரணமான மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா டெனியை பதவி நீக்கம் செய்யக்கோரியும், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதில் தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் மகேந்திரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு