பர்கூர்
பர்கூர் அருகே உள்ள ஜெகினி கொல்லை கிராமத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.