தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில்தூய பாத்திமா அன்னை ஆலய தேர்த்திருவிழா

தினத்தந்தி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலய 50-ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் ஆலய பங்கு தந்தைகள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நடந்தது. தொடர்ந்து தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடந்தது. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.

பின்னர் மாலை வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேரை பாதிரியார் இருதயம் மந்திரித்து, தேர் பவனியை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. இந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்நது கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை