தமிழக செய்திகள்

உப்பளத்தில் தீ விபத்து

தூத்துக்குடியில் உப்பளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் ஹட்லிமச்சாது என்பவருக்கு சொந்தமான உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் விளைந்த உப்பை ஓலைக் கொட்டகை அமைத்து அதில் சேகரித்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, அந்த ஓலைக் கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் ஓலை கொட்டகை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் சேமித்து வைத்து இருந்த உப்பும் சேதம் அடைந்தது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து