தமிழக செய்திகள்

மிச்சர் கடையில் தீ விபத்து; ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்...!

மேலூரில் மிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

தினத்தந்தி

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் இளங்கோ. இவர் சிவன் கோவில் தெவில் மிச்சர் கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்த கடையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

கடை தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் இளங்கோ, அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். .

தீ மளமளவென்று எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர், மேலூர் தீயணைப்பு வீரர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடையில் எரிந்த தீயை சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்பு அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்