தமிழக செய்திகள்

தீத்தடுப்பு ஒத்திகை

அரியலூரில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

தினத்தந்தி

அரியலூர் அருகே உள்ள இலிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம் அரசு உதவி பெறும் கே.ஆர்.வி.நடுநிலைப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு அரியலூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் புகழேந்தி வரவேற்புரையாற்றினார். தீயணைக்கும் வழிமுறைகள் பற்றி முன்னணி தீயணைப்பாளர் மனோகரன் மாணவ-மாணவிகளுக்கு செய்து காட்டினார். தொடர்ந்து மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள், வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தீயணைப்பாளர் ராஜா எடுத்துரைத்தார். இதில் தீயணைப்பு வீரர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது