தமிழக செய்திகள்

அரூர் அருகே கோழி பண்ணையில் தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

அரூர் அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

தினத்தந்தி

அருர் ,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தாமரைகோழியம்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மின் கசிவி ஏற்பட்டு கோழி பண்ணையில் தீ பற்றியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் விஸ்வநாதன் அரூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கோழி பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் 2 ஆயிரம் கோழி குஞ்சுகள், 10 மூட்டை கோழி தீவனம் உள்பட பல்வேறு உபகரண பொருட்கள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை