தமிழக செய்திகள்

மறைமலைநகர் அருகே துணி துவைக்கும் எந்திரத்தில் புகுந்த பாம்பு - தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

மறைமலைநகர் அருகே துணி துவைக்கும் எந்திரத்தில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்கரணை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் வழக்கம் போல் வீட்டில் உள்ள துணி துவைக்கும் எந்திரத்தில் துணிகளை போட்டு இயக்கினார். அப்போது எந்திரத்தில் இருந்து உஷ் உஷ் என்று சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜலட்சுமி துணி துவைக்கும் எந்திரத்தை நிறுத்தினார். மீண்டும் அதே போல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. எந்திரத்தில் பாம்பு இருப்பதை பார்த்த ராஜலட்சுமி உடனே மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எந்திரத்தில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி உயரமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்