தமிழக செய்திகள்

இருசக்கர வாகனத்திற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு - 5 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் ஓனம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பாம்பை விரட்டும் முயற்சி பலனளிக்காததால், இது குறித்து அவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் பாம்பு பதுங்கியிருந்ததால், அதை வெளியே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 5 மணி நேரமாக போராடி பாம்பை மீட்டனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்குள் தீயணைப்புத்துறையினர் விட்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து