தமிழக செய்திகள்

தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

சென்னை,

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரதாகிருஷ்ணன் கூறியதவது: ஒரு நாளைக்கு 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்பட்டதற்கான குறுஞ்செய்தி செல்போன்களுக்கு அனுப்பிவைக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் நபர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடப்பட்டவர்கள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

முன்கள பணியாளர்களுக்கு பாரபட்சமின்றி தடுப்பூசி வழங்கப்படும். பிற மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்