தமிழக செய்திகள்

பழ வண்டியை சேதப்படுத்திய மீன் கடைக்காரர் கைது

தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த ஒரு மீன்கடைக்காரர், இங்கு பழக்கடை வைக்க கூடாது என்று கூறி பழம் வியாபாரம் செய்த நபரிடம் தகராறு செய்துள்ளார்.

தினத்தந்தி

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த அருள் மாணிக்கம் மகன் மிக்கேல் ராஜ் (வயது 32), லோடு ஆட்டோவில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் இவர் தூத்துக்குடி, முத்தையாபுரம் வடக்கு தெரு சந்திப்பு அருகே பழம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு மீன் கடை வைத்திருந்த முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சங்கர்ராஜ் மகன் புகழேந்தி(25), இங்கு பழக்கடை வைக்க கூடாது என்று கூறி தகராறு செய்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்ததை தொடர்ந்து அவர் சென்று விட்டார். அன்று மாலையில் இரும்பு கம்பியுடன் வந்த புகழேந்தி, திடீரென பழவண்டியை அடித்து சேதப்படுத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற தொழிலாளி அசாருதீன் என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனர். 

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்