திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுக ளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி28-ந்தேதி முதல் வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் தென் தமிழகத்தில் இருந்த பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 3 இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந் தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது சேவையை தொடங்க உள்ளது. இந்த விமான சேவையானது வருகிற 30-ந் தேதி வரை தொடரும் என விமான நிலைய இயக்குனர் ராஜு தெரிவித்துள்ளார்.