தமிழக செய்திகள்

சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு 'ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்' பெயரில் விருதுகள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு 'ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்' பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு வருங்காலங்களில் 'ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்' பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக செவிலியர் தினத்தை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பிரபு மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு எதிர்காலத்தில் விளக்கேந்திய மங்கை என்று பெயர்பெற்ற 'ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்' பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டுக்குமான விருதுகள் அந்த நிகழ்ச்சியில் சேர்த்து வழங்கப்படும் என்றும் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை