தமிழக செய்திகள்

முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா

முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

காரைக்குடி

காரைக்குடி அருகே இலுப்பைக்குடி கிராமத்தில் உள்ள கோட்டைக்கரை முனிஸ்வரர் கோவிலில் 35-வது ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 17-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், அழகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் பக்தர்கள் பலரும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் இலுப்பைக்குடி காரைக்குடி, அரியக்குடி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு