தமிழக செய்திகள்

தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி

தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரண்மனைகுறிச்சி கிராமத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் ஒன்றிணைந்து திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் நீரையும், பூக்களையும் எடுத்துக்கொண்டு மேள தாளங்களுடன் கோலாட்டத்துடன் பாதயாத்திரையாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த புனித நீராலும், பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின் பக்தர்கள் கொண்டு வந்த பூக்களை ஒன்றாக கொட்டி பூஜை செய்து அந்த பூக்களை அம்மன் மீது தூவினர். இதில், அரியலூர், திருமானூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு