சென்னை,
வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்றில் செயலாளராக பணிபுரிந்தவர், மோசடி வழக்குகளில் சிக்கினார். அதாவது, அவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.10 லட்சத்து 65 ஆயிரம் வரை பயிர்க்கடனில் மோசடியில் ஈடுபட்டதாக வணிக குற்றப் புலனாய்வு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த வேலூர் குற்றவியல் கோர்ட்டு, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து செயலாளர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை வேலூர் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு விசாரித்தது.