தமிழக செய்திகள்

‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

மோசடி வழக்கில் சிக்கிய வங்கி செயலாளர், ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டதால் கீழ் கோர்ட்டு அவருக்கு வழங்கிய சிறை தண்டனையை மனிதாபிமான அடிப்படையில் ஐகோர்ட்டு ரத்துசெய்துள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்றில் செயலாளராக பணிபுரிந்தவர், மோசடி வழக்குகளில் சிக்கினார். அதாவது, அவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.10 லட்சத்து 65 ஆயிரம் வரை பயிர்க்கடனில் மோசடியில் ஈடுபட்டதாக வணிக குற்றப் புலனாய்வு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த வேலூர் குற்றவியல் கோர்ட்டு, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து செயலாளர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை வேலூர் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு விசாரித்தது.

SCROLL FOR NEXT