ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினரை படத்தில் காணலாம். 
தமிழக செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிஊட்டியில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி ஊட்டியில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

ஊட்டி: நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி ஊட்டியில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று நடந்தது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

உயிர்கள் பலி

நீட் தேர்வு தற்போது பல்வேறு உயிர்களை பலி வாங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு கண்டுகொள்ளாமல் தான் தோன்றித்தனமாக செயல்படுகிறது. தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், குறிப்பாக தமிழக கவர்னருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் மசோதாவை நீண்ட காலம் கிடப்பில் போட்டு விட்டார். எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், நகர செயலாளர் ஜார்ஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு