சென்னை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தலைமை செயலகம் அருகே 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை 'மகிழம்' மரத்தை நட்டு தொடங்கி வைத்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.