தமிழக செய்திகள்

தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து நபர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், லோக்கல் பண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த திருவெம்பாலா பிரசாத் என்பவர், சுமார் 181 கிராம் நகைகளை அடமானம் வைத்து எட்டரை லட்ச ரூபாய் பணம் கடன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி வங்கியில் உள்ள நகைகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்த போது, பிரசாத் அடகு வைத்த 181 கிராம் நகைகளும் தங்க முலாம் பூசப்பட்ட செம்பு நகைகள் என்பது தெரியவந்தது.

வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், திருவெம்பாலா பிரசாத்தை கைது செய்திருக்கும் நிலையில், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு