தமிழக செய்திகள்

நாமக்கலில் மாந்திரீகம் செய்வதாக மோசடி - மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு

மாந்திரீகம் என்ற பெயரில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பாப்பாயி. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டினுள் சென்ற மர்ம நபர்கள் சிலர், மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாந்திரீகம் என்ற பெயரில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு