தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

60,777 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டப்பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முழுமையாக நிறைவடையும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 26,384 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 60,777 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 8,905 மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 8,221 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள பணிகள் ஏப்ரல் மாத்திற்குள் முடிக்கப்படும் எனவும் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...