தமிழக செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

சேரன்மாதேவியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பொழிக்கரையில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, அப்பலோ பார்மசி, நண்பர்கள் ரத்ததான கண்தான விழிப்புணர்வு குழு சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயின் அளவு கண்டறிதல் முகாம் நடைபெற்றது. சரவணன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் அபினயா கண் பரிசோதனைகளை மேற்கொண்டார். ரத்த அழுத்த பரிசோதனைகளை அப்பலோ பார்மசியினர் செய்தனர். விழி ஒளி ஆய்வாளர் சிஞ்சு, ஹசினா, ஹெப்சி ஆகியோர் விழி, ஒளி பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

முகாம் மேலாளர் மாணிக்கம் ஆரோக்கிய உணவு பழக்கம் பற்றி எடுத்து கூறினார். கண்தான விழிப்புணர்வு குறித்து குமரேசன் உரையாற்றினார். ரத்ததானத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி சிவா பேசினார். முகாமில் சேரன்மாதேவி பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு